tamilnadu

img

வெள்ளகோவிலில் சமூக விரோதிகள் அட்டகாசம் பேருந்து நிழற்குடை தகர்ப்பு

திருப்பூர், பிப். 3 - வெள்ளகோவில் சிவநாதபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தத்தை நள்ளிரவு சமூக விரோதிகள்  தகர்த்தது தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட் டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சிவநாதபுரம் கிளை மற்றும் அப்பகுதி பொது மக்கள் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் திங்களன்று  புகார் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, சிவநாதபுரத்தில் பேருந்து நிழற்குடை கட்டப்பட்டு கடந்த 15 ஆண்டு காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் சுயநல நோக்கத்துடன் சமூக விரோத சக்திகள் கடந்த 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு மக்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் நிழற்குடையை இடித்துத் தகர்த்து விட்டனர். பொது மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கு உரிய நிழற் குடையைத் தகர்த்த சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அதே இடத்தில் மீண்டும் பேருந்து நிழற்குடையை அமைத்து பொது மக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட் டுள்ளது. அத்துடன் இந்த சட்டவிரோத செயல் குறித்து வெள்ளகோவில் காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை வட்டாரத்தினர் தெரிவித்ததாக பொது மக்கள் கூறினர்.